×

ஆந்திராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் குவார்ட்டர் மது பாட்டில் ரூ. 50க்கு விற்கப்படும் : பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

ஹைதராபாத் : ஆந்திராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் குவார்ட்டர் மது பாட்டில் ரூ. 50க்கு விற்கப்படும் என்று அம்மாநில பாஜக தலைவர் வீரராஜு பேசியிருப்பது சலசலப்புக்கு வித்திட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் வருகிற 2024ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆந்திராவில் குவார்ட்டர் மது பாட்டில் ரூ. 200க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் விஜயவாடாவில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் வீரராஜு,’ ஆந்திர அரசு அதிக விலைக்கு தரமற்ற மதுவை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. போலியான பிராண்டுகளை அதிக விலை வைத்து விற்கின்றனர். ஆந்திராவில் ஆளுங்கட்சித் தலைவர்கள் பலரும் மது ஆலைகளை நடத்துகின்றனர். இந்த மது ஆலைகளில் தரமற்ற மதுவே தயாரித்து விற்கப்படுகிறது. ஆந்திராவில் உள்ள ஒவ்வொருவரும் மதுவுக்காக மட்டும் மாதத்திற்கு ரூ. 12,000 வரை செலவிடுகிறார்கள். அந்தப் பணத்தைத்தான் அரசு மக்களிடம் நலத் திட்டங்கள் என்று பெயரில் செலவிட்டுக் கொள்கிறது.ஆந்திராவில் ஒரு கோடி பேர் மது அருந்துகிறார்கள். அந்த ஒரு கோடி பேரும் 2024 சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் முதலில் தரமான குவார்ட்டர் பாட்டில் மதுவை ரூ. 75க்கு விற்போம். பின்னர் அதை மேலும் குறைத்து 50 ரூபாய்க்குத் தருவோம் என்றார்….

The post ஆந்திராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் குவார்ட்டர் மது பாட்டில் ரூ. 50க்கு விற்கப்படும் : பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Andhra Pradesh ,Hyderabad ,
× RELATED ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளியில்...